மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வனமகன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாயிஷா. இந்தி நடிகையான இவர், தெலுங்கில்தான் நாயகியாக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வரும் அவர், அடுத்தபடியாக தமிழில், பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவில் நடிக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் இவர் ஐதராபாத்தில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். அந்த வீட்டில் தான் முன்பு சமந்தா மார்க்கெட்டில் பிசியாக இருந்தபோது குடியிருந்தாராம்.
இந்த நிலையில், தற்போது நிக்கி கல்ராணியும், சென்னை எழும்பூரில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். ஆனால அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே பல வருடங்களாக நயன்தாரா குடியிருந்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவை சிலமுறை எதேச்சையாக சந்தித்துள்ளாராம் நிக்கிகல்ராணி. இதையடுத்து அவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு வளர்ந்து கொண்டி ருக்கிறதாம். இதை தனது கோலிவுட் வட்டாரங்களில் பெருமையாக சொல்லி வருகிறார் நிக்கி கல்ராணி.