மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அசாதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரை விட தமிழகத்தில் ஊழல் மிஞ்சிவிட்டது, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என கமல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியில் கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்விபரம் வருமாறு... "அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை நடிகர் கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும். ஊழல் இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? சினிமா துறையினருக்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து கமல் இதுபோன்று பேசி வந்தால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அவர் கூறினார்.