மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். திலீப்பின் ஒருநாள் போலீஸ் காவல் இன்று முடிவடைவதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து ஜாமின் கேட்டு திலீப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் அவரை தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவால் திலீப்பிறகு மேலும் சிக்கல் உருவாகியிருப்பதோடு, இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பில்லை என்ற தெரிகிறது.