மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை சென்னை மெரீனா கடற்கரை காமராசர் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் அமைக்கப்பட்டு வரும் சிவாஜி மணிமண்டபத்தில் சிலையை வைக்க இருப்பதாக அரசு தெரிவித்தது. இப்போது அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் "சிவாஜி கணேசன் 50 ஆண்டுகளாக கலைச் சேவை செய்தவர், 300 படங்களுக்கு மேல் நடித்தவர். பல விருதுகளை பெற்றவர். அவர் சிலை மெரீனா கடற்ரையிலேயே வைக்கப்பட வேண்டும்.
கடற்கரையில் தலைவர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சிவாஜி சிலையை வைக்க வேண்டும். மணி மண்டபத்துக்கு மாற்றக்கூடாது. இதுகுறித்து முதல்வரிடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சிவாஜி சிலையை மெரீனா கடற்கரையிலேயே வைக்க உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை வருகிற திங்கள் கிழமை நடக்கும் என்ற நீதிமன்றம் அறிவித்துள்ளது.