ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது. மேலும் அவரை இரண்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் பாவனா. இவர், பிப்., 17ல் காரில் சென்றபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார். இதில் பல்சர் சுனில் என்பவன் சிக்கினான். சுனிலை ஏவியது நடிகர் திலீப் தான் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், சுனில் இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார் என, திலீப் புகார் கொடுத்தார்.
அந்த புகார், பொய் என உறுதி செய்யப்பட்டு, திலீப்புக்கு எதிராக மாறியது. இதையடுத்து திலீப், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின், ஆலுவா கிளைச்சிறையில், 523ம் எண் கைதியாக அடைக்கப்பட்டார். அவருடன் மேலும் ஐந்து கைதிகள் உள்ளனர்.
இதனிடையே திலீப் ஜாமின் கேட்டு கொச்சியில் உள்ள அங்கமாலி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. விசாரணை, ஆரம்ப நிலையில் இருப்பதால் கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. அதோடு, திலீப்பை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். 2 நாள் அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.