மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய பி.வி.பிரசாத், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி நடிக்கும் படம் வேலை இல்லா விவசாயி. தயாரிப்பும், இசையும் அவர் தான். பிஸ்மயா என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ராசாமதி, கே.குணசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். படம் பற்றி பி.வி.பிரசாத் கூறியதாவது:
எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். செய்யாரை சுற்றி நிறைய நிலம் எங்களுக்கு இருந்தது என்று தான் சொல்ல முடியுமே தவிர இருக்கிறது என்று சொல்ல முடியாது. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் பசுமையாக காட்சி தந்த அந்த விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டது. "எல்லாம் இருக்கிறது சோறு தான் இல்லை" என்கிற சோகம் அடுத்த தலை முறை மக்களின் குரலாக ஒலிக்க போகிறது.
ஐய்யோ தவறு செய்து விட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம். எந்த தொழில் புரட்சியும் பசியை போக்காது. எந்த விஞ்ஞானமும் பூமித் தாயைப் போல அரிசியையும், கோதுமையயும் விளைவிக்காது. பூமியை மலடாக்கி விட்டு, மாட மாளிகை கட்டி என்ன பயன். ஊருக்கெல்லாம் சோறு போட்ட நாம் அரிசியையும் பருப்பையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
செய்யாறில் பண்ணையாராகவும், விவசாயியாகவும் பெருமையாக வலம் வந்த பல பேரை பங்களா வாட்ச் மேனாகவும், ஏ.டி.எம் வாட்ச் மேனாகவும் பார்த்திருக்கிறேன். தன் நிலத்தை வாங்கியவர்கள் அதே ஏ.டி.எம்.,களில் வந்து கை நிறைய பணத்தை எடுக்கும் அவர்களை ஏக்கமாக பார்க்கும் அவலத்தையும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் தான் விவசாயின் குரலாக இதில் பதிவு செய்கிறோம். செய்யாறு காஞ்சிபுரம் அதை சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம் என்றார் இயக்குனர் பி.வி.பிரசாத்.