மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கியது லைக்கா. தொடர்ந்து பெரிய பட்ஜெட் மற்றும் சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் லைக்கா, தற்போது இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து வரும் 2.O படத்தை பிரமாண்டமாய் ரூ.400 கோடி பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறது.
ரஜினி, அக்ஷ்ய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகத்தில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.O, அடுத்தாண்டு ஜன., 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் சார்பில், 2.O படத்தின் 3டிதொழில்நுட்ப தொடர்பான பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய லைக்கா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராஜூ மகாலிங்கம், "ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி தொடர்பான விஷயங்கள் முழுமையாக முடிவுக்கு வரும் வரை புதிய படங்கள் எதையும் தயாரிக்க வேண்டாம் என்று தலைமை அலுவலகத்திலிருந்து கூறியுள்ளார்கள். ஆகையால் நல்ல முடிவு வரும் வரை புதிய படங்கள் எதுவும் தயாரிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கேளிக்கை வரியை நீக்கும்படி லைகா நிறுவனம் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
2.O தவிர, லைக்கா நிறுவத்தின் சார்பில் "சபாஷ் நாயுடு, வட சென்னை, இம்சை அரசன் 2, இப்படை வெல்லும், கரு" போன்ற படங்களும் தயாராகி வருகின்றன.