முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் சார்பில் மணிமேகலை தயாரித்திருக்கும் படம் "நான் யாரென்று நீ சொல்". கீர்த்திதரன் ஹீரோவாக நடிக்க நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வில்லன் ரோலில் நடிக்க, ஹீரோயினாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து பேசிய இயக்குநர் விக்ரமன்...
"நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன், மற்ற விஷயங்களை பேச மாட்டேன். ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது. நேற்றும், இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும் இழப்பு. ஜி.எஸ்.டி 28 சதவீதம், இது தவிர மாநில வரி 30 சதவீதம் என மொத்தம் 65 சதவீதம் வரியாக போனால் எப்படி சினிமா வாழும்.
வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும். ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கிறார்கள். மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும். எம்ஜிஆர்., நூற்றாண்டு நடக்கிற இந்த காலகட்டத்தில் இதை மாநில அரசு யோசிக்க வேண்டும்.
கருணாநிதி கொண்டு வந்த அந்த வரிச் சலுகையை ஜெயலலிதாவும் கடை பிடித்தார். கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றியது மாதிரி, முதல்வர் பழனிசாமியும் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.