மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மதராசப்பட்டினம் படத்தில் லண்டன் நடிகை எமிஜாக்சனை அறிமுகம் செய்த ஏ.எல்.விஜய், வனமகன் படத்தில் அறிமுகம் செய்துள்ள மும்பை நடிகை சாயிஷா. முதல் படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட அவர், அந்த படத்தில் நடித்து வந்தபோது பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி நடிக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் கமிட்டாகி விட்டார். வனமகன் படத்தின் ரிலீசுக்குப்பிறகு மேலும் சில படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் உள்ளார்.
இந்நிலையில் தமிழில் தனது என்ட்ரி குறித்து சாயிஷா கூறுகையில், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து விட்ட எனக்கு தமிழில் முன்னணி நடிகர் ஜெயம்ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது சந்தோசமாக இருந்தது. என்றாலும், எனக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால் ஒருவித அச்சம் உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. ஆனால், அவரை சந்தித்த முதல் நாளே அவர் சகஜமாக பழகினார். அதோடு, தமிழுக்கு நான் புதுவரவு நடிகை என்றபோதும் எந்தவித ஈகோவும் இல்லாமல் நடந்து கொண்டார். அது அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது.
மேலும், சில காட்சிகளில் எதிர்பாராதவிதமாக நான் அதிக டேக் வாங்கினாலும் அவர் கோபித்துக்கொள்ள மாட்டார். கொஞ்சம்கூட முகம் சுழிக்காமல் நமக்காக மீண்டும் மீண்டும் நடிப்பார். தமிழ் டயலாக் பற்றி புரிதல் இல்லாத எனக்கு அதை புரிய வைத்து உதவியாக இருந்தார். அதனால் என்னைப்போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு இந்த மாதிரி நடிகருடன் நடிக்க சான்ஸ் கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று ஜெயம்ரவியுடன் நடித்தது பற்றி மனம் திறந்து பேசி வருகிறார் சாயிஷா.