மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மஞ்சப்பை படத்துக்கு பிறகு வெற்றியை ருசிக்கவில்லை விமல். அதற்கு பிறகு நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவர் நடித்து முடித்துள்ள ரெண்டாவது படம் வெளிவரவே இல்லை. இதனால் ஒரு கட்டாய வெற்றி தேவை என்கிற நிலையில் இருக்கிற விமல், தனது பாணி காமெடியில் ஒரு பேமிலி செண்டிமென்ட்ட படம் தயாரித்து, நடிக்க விரும்பினார். மலைக்கோட்டை, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், பட்டத்து யானை படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் சொன்ன கதை விமலுக்கு பிடித்து விடவே அதையே தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அதுதான் மன்னர் வகையறா.
விமலுடன் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையாக ஒளிப்பதிவு செய்கிறார், ஜாக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போட்டிருந்த மன்னர் வகையறாவை இப்போது விரட்டி சுறுசுறுப்பாக்கி இருக்கிறார் விமல். தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது மன்னர் வகையறா. அடுத்த மாதம் வெளிவரலாம் என்று தெரிகிறது.