மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா, விவாகரத்து கோரிய வழக்கில் ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது இளைய மகள் செளந்தர்யா. செளந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
செளந்தர்யா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். இருவரையும் சமாதானம் செய்ய இருவீட்டாரும் முயற்சித்து வந்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் செளந்தர்யா, விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்தார். அதேப்போன்று அஸ்வினும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக செளந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் இன்று நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை கொடுத்தனர். இருதரப்பு விளக்கத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீர்ப்பை ஜூலை 4-ம் தேதி வழங்குவதாக கூறி வழக்கை தள்ளி வைத்தது.