நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தன் மகளை நடிக்க வைக்க விரும்பிவில்லை என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அசத்தியவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் நடிகை ஜான்வி சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட கரண் ஜோகர், ஜான்வியை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வந்தது.
இதுகுறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ரீதேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... "என் மகள் நடிகையாவதை நான் விரும்பவில்லை. ஒரு பெற்றோராக நான் அவளுக்கு திருமணம் செய்து வைப்பதே மகிழ்ச்சி. ஆனால் நான் அவளை கட்டாயப்படுத்த மாட்டேன். அவளுக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை செய்யலாம். நடிகையாக அவள் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி தான்" என்று கூறியுள்ளார்.