மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் துல்கர் சால்மான், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கில் உருவாகி வரும் மகாநதி படத்திலும் நடிக்கிறார். மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள். எவடே சுப்ரமணியம் தெலுங்கு படத்தை இயக்கிய அஸ்வின் நாக் இந்த படத்தை இயக்குகிறார்.
இதில், நடிகை சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதற்காக ஓரளவு வெயிட் போட்டு சாவித்ரியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சாவித்ரியின் கணவரான நடிகர் ஜெமினிகணேசன் வேடத்தில் மலையாள நடிகர் துல்கர்சல்மான் நடிக்கிறார். அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்த அவர், ஐதராபாத்தில் நடைபெற்று வரும் மகாநதி படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.