விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பிரசாத் தேவினேனி, ஷோபூ யர்லஹட்டா ஆகிய இருவரும் இணைந்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரித்தனர். இரண்டு பாகங்களையும் தலா 250 கோடி செலவு செய்து தயாரித்த அவர்கள் ரூ. 1600 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்தபடியாக ஆர்கா மீடியா நிறுவனம் சார்பில் நடிகர் சர்வானந்தை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழில், எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்பட சில படங்களில் நடித்த சர்வானந்த், தெலுங்கில் சுமார் 20 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்திருக்கிறார். லாவண்யா திரிபாதியுடன் இணைந்து இவர் நடித்த ராதா என்ற படம் கடந்த மே மாதம் ரிலீசானது. இந்நிலையில், பாகுபலி தயாரிப்பாளர்களின் புதிய படத்தில் நாயகனாக நடிக்க தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறார் சர்வானந்த். இந்த படத்தை பிரகாஷ் கோவெலம்முடி இயக்குகிறார்.