நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிப்பது என் பணி, அதை செய்து வருகிறேன், அதை செய்ய விடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரசிகர்களுடனான சந்திப்பிற்கு பிறகு ரஜினியை பற்றிய செய்தி தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அவர் அரசியலுக்கு வருவது போன்ற ரீதியில் பேசியது தான். இதுதொடர்பாக டிவி, சமூகவலைதளம் என விவாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன. அதோடு அவர் அரசியலுக்கு வர ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஜூலை மாதம், ரஜினி புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்யநாராயணராவ் பெங்களூரில் செய்தி வெளியிட்டது பரபரப்பானது. இதுதொடர்பாக ரஜினி, பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக இன்று(மே 27-ம் தேதி) மதியம் முதலே பரபரப்பானது. ஆனால் அப்படியொரு செய்தி தவறானது என்றும் கூறப்பட்டது.
ஆனால் மாலையில் ரஜினி, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "காலா படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறேன். நடிப்பது என் வேலை, இது உங்கள்(பத்திரிகையாளர்கள்) வேலை. எனது வேலையை செய்ய விடுங்கள்" என்றார்.
இருதினங்களுக்கு முன்னர் ரஜினி, அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் அறிவிப்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு நாளை(மே 27-ம் தேதி) முதல் மும்பையில் துவங்க இருக்கிறது. இதற்காக அவர் மும்பை புறப்பட்டு செல்ல உள்ளார். காலா படத்தை கபாலி புகழ் ரஞ்சித் இயக்க, அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார்.