மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பில்லில் ஏற்பட்ட பிரச்சனையைத்தான் பெரிது படுத்தி விட்டார்கள் என்று ஹோட்டலில் ஏற்பட்ட தகராறு சம்பவத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார் நடிகை ரிச்சா. தனுசுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் ரிச்சா. இவருக்கும், மயக்கம் என்ன படத்தில் நடித்த புதுமுக நடிகர் சுந்தருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுந்தருடன் சென்று ஒரே அறையில் தங்க ரூம் கேட்டதாகவும், ஹோட்டல் நிர்வாகத்தினர் ரிச்சாவுக்கு மட்டும் ரூம் தருகிறோம். இருவரும் ஒன்றாக தங்க அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டதாகவும் செய்தி வெளியானது. இதனால் கோபமடைந்த ரிச்சா ஹோட்டல் நிர்வாகிகளிடம் தகராறு செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஏற்கனவே சுந்தர் விளக்கம் அளித்திருந்தார். இப்போது ரிச்சாவும் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், என் சொந்த வாழ்க்கை பற்றி தவறான செய்திகள் வருகின்றன. ஹோட்டலில் அப்படி சம்பவம் எதுவும் நடக்கவில்லை. சிம்புவின் ஒஸ்தி பட விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தாமதமாக ஹோட்டலுக்கு சென்றேன். அப்போது ஹோட்டலில் கொடுத்த பில் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அதுபற்றி ஹோட்டல் நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது சுந்தர் அங்கு வந்தார். என்னுடைய புகைப்படங்களை கொடுத்தார். வேறு எதுவும் அங்கு நடக்கவில்லை. சுந்தருக்கும் எனக்கும் காதல் இல்லை. இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம், என்று கூறியுள்ளார்.