மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை பெற்றவர் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி.. பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளான இவர், பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, பின்னர் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 1995ல் எஸ்.பி.பி மற்றும் ரகுமான் இருவரையும் கதாநாயகர்களாக வைத்து 'பாட்டு பாடவா' என்கிற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அதன்பின் நேரடி சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருந்த பி.ஆர்.விஜயலட்சுமி, இப்போது 22 வருடங்கள் கழித்து மீண்டு இயக்குனர் தொப்பியை அணிய இருக்கிறார். வழக்கம்போல ஒரு புதுவிதமான காதல் கதையுடன் களமிறங்கியுள்ள இவர், மலையாள சினிமாவில் தற்போது கவனத்தை ஈர்த்து வரும் டொவினோ தாமஸ் என்பவரை இந்தப்படத்தின் கதாநாயகன் ஆக்கியதன் மூலம் தமிழில் அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடிக்கிறார். இன்னொரு ஆச்சர்யமான விஷயம், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.