ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
திருட்டு விசிடி ஒழிப்பு, இணையதளத்தில் படங்கள் திருட்டுத்தனமாக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் வேலை நிறுத்ததிற்கு ஒத்துக் கொண்ட தியேட்டர் அதிபர்கள் சங்கம் பிறகு பின் வாங்கிவிட்டது. பெப்சியும் வேலை நிறுத்ததில் கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கவில்லை. பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து அதை வெளியிட தயாராக இருக்கும் நிறுவனங்களும் வேலை நிறுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைகூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சங்க வளாகத்தில் நடக்கிறது. இதில் வேலை நிறுத்தம், அதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, புதிய சங்கம் உருவாகியிருப்பது, ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலமுனை பிரச்சினைகளால் அனுதினமும் மிகப்பெரிய பொருள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் 21.05.17 அன்று மாலை சங்க வளாகத்தில் நடக்கிறது. இதில் தயாரிப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.