நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'வேதாளம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு அஜித், சிவா கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் 'விவேகம்' படத்திற்கு ஏற்கனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அஜித், சிவா கூட்டணி இணையும் 3 ஆவது படம் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்துகொள்ள விவேகம் படத்தின் ஒவ்வொரு நகர்வும் எதிர்பார்க்கப்பட்டது.
அஜித்தின் சிக்ஸ் பேக் உடம்புடன் கூடிய 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளிவந்து வைரலாகி இருந்ததால், டீஸர் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தநிலையில், மே 11-ம் தேதி விவேகம் டீஸர் இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே, விவேகம் டீஸர் லீக்கானது.
இதற்கு காரணம் படத்தின் எடிட்டர் ரூபனின் உதவியாளர்கள் தான் காரணம் என செய்திகள் வெளியாகின. அதை வைத்து அஜித்தின் ரசிகர்கள் எடிட்டர் ரூபனை சமூகவலைத்தளங்களில் காய்ச்சி எடுத்தனர். இந்த செய்திக்கு கடுமையாக தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் ரூபன்.
"விவேகம் படத்தில் பணியாற்றும் துணை இயக்குநர் யார் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய சுய விளம்பரத்துக்காக போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம். எனது பெயரைக் களங்கப்படுத்தியதற்காக நான் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். சமூக ஊடகங்கள் தவறானவற்றை பரப்ப எளிதான கருவியாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் ஒரு வீடியோ சேனலை துவக்கி எதை வேண்டுமானாலும் பரப்பும் நிலையே உள்ளது. சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவு செய்வதற்கு முன் தயவுசெய்து சிறிதேனும் அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.
தன் மீதோ, தன்னுடைய உதவியாளர்கள் மீதோ தவறில்லை என்பதை சொல்லும்போது விவேகம் படத்தின் துணை இயக்குநர் பற்றி ஏன் குறிப்பிட்டார் என்பதுதான் புரியவில்லை.