மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 28-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் மும்பை தாராவி பகுதியில் நடைபெறுவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே தாராவி போன்ற செட்டை உருவாக்கும் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் 'கபாலி' படத்திற்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணனே இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். அது மட்டுமல்ல, ரஜினி படத்துக்கான கம்போசிங் வேலைகளை சந்தோஷ் நாராயணன் துவங்கி விட்டார். தனுஷ் நடித்த கொடி படத்துக்கு இசையமைத்தபோது சந்தோஷ் நாராயணன் அநியாயத்துக்கு டார்ச்சர் செய்திருக்கிறார். அதை மனதில் வைத்து இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் வேண்டாம், ஷான் ரோல்டன் இசையமைக்கட்டும் என்று சொன்னாராம் தனுஷ்.
இதற்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டநிலையில், சந்தோஷ் நாராயணன்தான் தனக்கு சரியாக இருப்பார், அதனால் அவர்தான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் பா.ரஞ்சித். கடந்த சில மாதங்களாக இழுபறியாகவே இருந்த இந்த விவகாரம் சில தினங்களுக்கு முன்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.
தனுஷிடம் சொல்லி அவரது மனதை மாற்றி சந்தோஷ் நாராயணனை ஓகே பண்ண வைத்துள்ளனர். அதன் பிறகே அவர் இறங்கி வந்தாராம்.