விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
திருமுருகன் இயக்கிய மெட்டிஒலி சீரியலில் போஸ் என்ற வேடத்தில் நடித்தவர் வெங்கட். அதன்பிறகு சில சீரியல்களில் நடித்தவர், பின்னர் சினிமாவில் என்ட்ரி ஆனார். ஆனால், சிறிய வேடங்களில்தான் நடித்து வந்தார். இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்தில் வில்லனாக நடித்த போஸ் வெங்கட், தற்போது சில படங்களில் மெயின் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது நான் எதிர்பார்த்தபடி பெரிய வேடங்கள் கிடைக்கவில்லை. சிறிய வேடங்களில் தான் நடித்தேன். என்றாலும், மறுபடியும் டிவிக்கு சென்றால் சினிமாவில் கிடைத்த இடம் போய்விடும் என்பதால் தொடர்ந்து முயற்சி எடுத்தேன். அப்போதுதான் கவண் படத்தில் என்னை முழு வில்லனாக்கினார் கே.வி.ஆனந்த். அது என்னை பேச வைத்து விட்டது. அதனால் இப்போது சில படங்களில் மெயின் வில்லனாக நடித்து வருகிறேன்.
மேலும், நான் சிறிய நடிகனாக இருந்தபோது சில படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சென்றபோது, என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. மேடைக்கு அழைக்காததால் ஒரு ஓரமாக நின்று விழாவை பார்த்து விட்டு சென்றேன். அப்போதெல்லாம் மற்ற நடிகர் நடிகைகள் மேடையில் இருப்பது போன்று நமக்கும் ஒரு இடம் கிடைக்காதா? என்ற ஏக்கம் இருந்தது. ஆனால், இப்போது கவண் படத்திற்கு பிறகு எனக்கு அந்த இடம் கிடைத்து விட்டது. ஒரு நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டேன் என்று உற்சாகமாக சொல்கிறார் போஸ் வெங்கட்.