ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்து வரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் பாராட்டி மகிழ்கிறார்கள். ஆனால் சக இயக்குநர்களால் எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்துள்ள வெற்றியை சகித்துக்கொள்ள முடியவில்லை. மற்ற இயக்குநர்களை நக்கலடிப்பதையே வேலையாக வைத்துள்ள ராம்கோபால்வர்மா பாகுபலி- 2 படம் பற்றி நக்கலடித்தார்.
அவரைப்போலவே, பாகுபலி 2 படத்துக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தங்கர் பச்சானும் தன்னுடைய கடுப்பை பதிவு செய்துள்ளார்.
"மக்கள் வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம், என்றைக்கு உருவாகுமோ அன்றைக்குத்தான் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். அதுவரை பாகுபலி போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களை சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று 'பாகுபலி 2' படத்தின் வெற்றி பற்றி தங்கர் பச்சான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான பாகுபலி 2 படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகுபலி 2 படம் இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.