ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் இணையும் ரஜினிகாந்தின் 161வது படம், மே 1ம் தேதி ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தை ரஜினிகாந்தின் மாப்பிள்ளையான தனுஷ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட உள்ளதால் மூன்று மொழிகளுக்கும் பொதுவான தலைப்பைப் படத்திற்கு வைக்க உள்ளார்கள். அது மட்டுமல்ல ஹிந்தியிலும் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவரைத்தான் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.
பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியின் முதல் படமான 'கபாலி' படத்தில் ரஜினி, மலேசியாவைச் சேர்ந்த தாதா 'கபாலி' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஆரம்பமாக உள்ள புதிய படத்திலும் ரஜினிகாந்த், தாதா கதாபாத்திரத்தில்தான் நடிக்கப் போகிறாராம்.
மும்பையைக் கலக்கிய தாதாவான சுல்தான் மிர்சா என்றழைக்கப்பட்ட ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழரான மஸ்தான் சிறு வயதிலேயே தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குச் சென்று செட்டிலானவர். மும்பையில் சட்ட விரோத செயல்களுக்குப் பெயர் போன கரீம் லாலா, வரதராஜ முதலியார் ஆகியோருடன் இணைந்து வேலை செய்தவர் மஸ்தான். பின்னர், தாவூத் இப்ராகிமுக்கும் ஆலோசகராக இருந்தவர்.
இந்தத் தகவல்களையும், ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன்தான் நடிக்க உள்ளார் என்பதையும் கடந்த சில நாட்களாக மும்பை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், இதுவரை தயாரிப்புத் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
வரதராஜ முதலியார் வாழ்க்கையை மையமாக வைத்துத்தான் மணிரத்னம், கமல்ஹாசன் நடிக்க 'நாயகன்' படத்தை உருவாக்கினார். பாஜகவின் ஆதரவாளர் எனக் கருதப்படும் ரஜினிகாந்த் மும்பை தாதா கதாபாத்திரத்தில் நடிக்கச் சம்மதித்திருப்பார் என்பது சந்தேகம்தான்.