ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
சினிமாவில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டவர் பாலா. தான் நினைத்ததை சுதந்திரமாக எடுக்கக்கூடியவர். முக்கியமாக பாலா இயக்கும் படங்களில் நடித்தால் நடிப்பில் நம்மை பட்டை தீட்டி விடுவார் என்று நடிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா போன்ற நடிகர்கள் பாலா படங்களில் நடித்த பிறகுதான் நடிப்பில் பளிச்சிட்டார்கள்.
முக்கியமாக யதார்த்த கதைகளை படமாக்கும் பாலா, தனது படங்களில் நடிப்பவர்களையும் யதார்த்த கேரக்டர்களாக நடிக்க வைப்பார். அதேபோல், சினிமா மேடைகளிலும் தனது மனதில் பட்டதை ஒழிவுமறைவில்லாமல் யதார்த்தமாக பேசுவார். அந்த வகையில், வனமகன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பாலா, என்னிடம் ஒரு ஐம்பது கெட்டப்பழக்கம் இருக்கிறது என்றால், ஜெயம்ரவி மற்றும் ஏ.எல்.விஜய்யிடம் எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஒரு கெட்டப்பழக்கமாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்படிப்பட்ட நல்லப்பிள்ளைகளைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. அதேசமயம் பெருமையாகவும் உள்ளது. இந்த நல்ல பிள்ளைகளை பெற்றதற்காக அவர்களின் பெற்றோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.