மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமானவர் சுபிக்ஷா. அதையடுத்து, நினைத்தது யாரோ, திரைக்கு வராத கதை, கடுகு ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது நேத்ரா, ரீங்கார ஓசை, ரா ரா ராஜசேகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடிக்கிறார் சுபிக்ஷா.
அந்த படம் குறித்து அவர் கூறுகையில், நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடிப்பது சந்தோசமாக உள்ளது. கடுகு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ள டைரக்டர் ஏ.வெங்கடேஷ், அதற்கான டப்பிங் பேசியபோது, நான் நடித்துள்ள பகுதியை பார்த்திருக்கிறார். அதில் எனது பர்பாமென்ஸ் அவருக்கு பிடித்ததால் நேத்ரா படத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த வகையில, கடுகு படத்தில் நான் சிறப்பாக நடித்ததற்காக கிடைத்த பரிசு என்றுதான் நேத்ரா படத்தை சொல்ல வேண்டும். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கனடாவில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் எனக்கான காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து விடும்.
மேலும், கடுகு படம் வெளியான பிறகு பல டைரக்டர்கள் என்னை தொடர்பு கொண்டு எனது நடிப்பை பாராட்டினர். ஐந்து டைரக்டர்கள் என்னை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள். அதில், எந்தெந்த கதைகளில் நடிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். நேத்ரா படப்பிடிப்பு முடிந்ததும் எனக்கு பிடித்த கதைகளை ஓகே செய்து நடிக்கத் தொடங்குவேன் என்கிறார் சுபிக்ஷா.