மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை தனது அனுமதியின்றி யாரும் பாடக்கூடாது என்று முன்னணி பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது, திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது விஷயத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கோவை வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்தது கடவுள் அருளால்தான். விருதுக்காக நான் அதிக சந்தோஷம் அடைவதில்லை என்றார். பின்னர் நிருபர்கள் இளையராஜா தன் பாடல்களை பாடக்கூடாது என்று பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பற்றிக் கேட்டனர். அதற்கு அவர் "நான் யாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை. அனுப்பியவரிடம் இந்த கேள்வி கேளுங்கள்" என்றார்.
தேசிய விருதுகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே? என்று கேட்டபோது "குற்றச்சாட்டை கூறியவர்களிடமும், தேசிய விருது வழங்குபவர்களிடமும் சென்று கேளுங்கள்" என்று கூறியபடி கோபத்துடன் வேகமாக எழுந்து சென்றார். பொதுவாக ஜேசுதாஸ் கோபம் கொள்ளமாட்டார். ஆனால் நேற்று அவர் நடந்து கொண்ட விதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.