மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது கடும் சவாலாக இருப்பது 'பைரசி' பிரச்சனை. திருட்டு விசிடிக்களை விட 'பைரசி' இணையதளங்கள் மூலம் புத்தம் புதிய படங்கள் உடனுக்குடன் இணையதளங்களில் பதிவேற்றப்படுவது அதிகமாகிவிட்டது. படம் வெளியான சில மணி
நேரங்களிலேயே அவை வந்துவிடுவது படங்களின் வசூலைப் பெரிதும் பாதிக்கிறது.
நேற்று வெளியான புதிய படங்கள் அனைத்துமே தற்போது பைரசி இணையதளங்களில் வந்துவிட்டது. விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்ற போது 'பைரசி' இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், மறுநாள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாகவும் மேடையில் அறிவித்தனர். ஆனால், இன்னும் அது என்ன அறிவிப்பு என்று வெளியாகவேயில்லை.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு இசை வெளியீட்டு விழாவில் பைரசி இணையதளத்தை கெட்ட வார்த்தை ஒன்றைச் சொல்லி திட்டிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்போது தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆகிவிட்டார். அதன் பின் அவர் பைரசி பற்றி எந்த மேடையிலும் பேசியதாகத் தகவல் இல்லை. நேற்று நடைபெற்ற 'தப்பு தண்டா' இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு பைரசி இணையதளங்கள் இப்படிப் படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
பைரசி இணையதளங்களை தைரியமா எதிர்த்து வந்தவர்கள் இப்படி திடீரென கெஞ்சும் அளவிற்கு இறங்கிப் போனதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. இத்தனைக்கும் மேடையில் மற்றொரு செயலாளரான கதிரேசன் மேடையில்தான் இருந்தார். இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் விஷாலுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.
பல தயாரிப்பாளர்கள் இந்த 'பைரசி' விவகாரங்களுக்கு விஷால் ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் என்றுதான் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், வெளியான நாளிலேயே புதிய படங்கள் வெளிவருவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது என வருத்தத்துடன் சொன்னார் புதிய தயாரிப்பாளர் ஒருவர். மற்ற விஷயங்களைக் கூட அப்புறம் செய்து கொள்ளலாம், ஆனால், இந்த பைரசி விவகாரத்திற்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.