மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வழங்கும் விழா இன்று(ஏப்., 13-ம் தேதி) ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. யேசுதாஸ்க்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், தமிழில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கிய பொம்மை படத்தில் நீயும் பொம்பை நானும் பொம்மை என்ற பாடலை பாடி அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட இந்தியாவின் அநேக மொழிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். யேசுதாஸ் கிறிஸ்தவராக இருந்தபோதும் தீவிர ஐய்யப்ப பக்தர், இவர் பாடிய ஹரிவராசனம் பாடல் பாடிய பிறகு தான் கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஏற்கனவே 1975ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002-ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் வழங்கி கவுரவித்த இந்திய அரசு, இப்போது பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது. இதுதவிர 7 முறை தேசிய விருது, 43 முறை பல்வேறு மாநில விருதுகள், 5 முறை பிலிம்பேர் விருதுகள் உட்பட இவர் பெற்ற விருதுகள் ஏராளம்.