மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தமிழில் முதல் முறையாக அறிமுகமாகும் நேரடிப் படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். தெலுங்கிலும் உருவாகி வரும் இப்படம் கடந்த வருடம் ஜுலை மாதம் ஆரம்பமானது. சுமார் 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இப்படத்தின் தலைப்பு என்ன, மகேஷ் பாபுவின் தோற்றம் என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
மகேஷ் பாபு நடித்து கடைசியாக வெளிவந்த 'பிரம்மோற்சவம்' படம் சரியாகப் போகவில்லை. அதனால், முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படமாவது பெரிய வெற்றியைப் பெறும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீபாவளி, பொங்கல், மகேஷ் பாபுவின் பிறந்த நாள், தெலுங்கு வருடப் பிறப்பு என ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் இப்படத்தின் தலைப்பு என்ன என்பது அறிவிக்கப்படும், மகேஷ் பாபுவின் தோற்றம் என்ன என்பது தெரிய வரும் என அவரது ரசிகர்கள் காத்திருந்து ஏமாந்து போனது தான் மிச்சம். இப்போது தமிழ்ப் புத்தாண்டு அன்று இப்படத்தின் முதல் பார்வை தலைப்புடன் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அன்றாவது அது வெளியாகுமா இல்லை அன்றும் ரசிகர்களை ஏமாற்றுவார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
நாங்கள் இரவு பகலாக உழைத்து வருகிறோம், ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் என மகேஷ் பாபு அறிவித்தும் அவருடைய ரசிகர்கள் முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.