மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் விக்ரம் பிரபு தனது முதல் தயாரிப்பாக தயாரித்துள்ள படம் ‛நெருப்புடா. இதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். விக்ரம்பிரபு உடன் நிக்கி கல்ராணி, வருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்ஷ்மணின் உதவியாளர் அசோக் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்தில் விமரிசையாக நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெருப்புடா இசையை வெளியிட்டார்.
பின்னர் பேசிய ரஜினிகாந்த்... ‛‛நடிகர் சிவாஜிக்கு எப்போதும் யாருமே போட்டி கிடையாது. சிவாஜியை மனதில் நினைத்து தான் அண்ணாமலை படத்தில் நடித்தேன். படம் அருமையாக வந்திருந்தது. அண்ணாமலை படத்தை பார்த்துவிட்டு சிவாஜி என்னை பாராட்டினார். தாத்தா சிவாஜி மற்றும் அப்பா பிரபுவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் விக்ரம் பிரபுவிடம் இருக்கிறது. நிச்சயம் அவர் செய்வார் என நம்புகிறேன். விஷால் சொன்னது போன்று படம் வெளிவந்த உடனேயே விமர்சனம் செய்யாதீர்கள். அவரின் கோரிக்கை நியாயமானது தான். விமர்சனத்தில் பயன்படுத்துகிற வார்த்தை கண்ணியமாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தும்படி விமர்சனம் செய்யாதீர்கள் என்றார்.