மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வரும் வேளையில், தமிழகத்திலும் அமைச்சர் விஜய பாஸ்கர், அவரது உறவினர்கள், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாகுபலியின் சென்னை மற்றும் ஐதராபாத் அலுவலகங்களிலும் ஐடி., ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவையே வியக்க வைத்த படம் ‛பாகுபலி'. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. வருகிற 28-ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் வியாபாரம் கோடிகளில் சூடு பறக்க நடந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் ஐடி., ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பாகுபலி-2 படத்தின் தெலுங்கு இசை வெளியீடு, ஐதராபாத்தில் பிரமாண்டமாய் 360 டிகிரி கோணத்தில், 4கே சவுண்ட் டெக்னாலஜியில் நடந்தது. அடுத்தப்படியாக நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தநிலையில் ஐடி., ரெய்டு நடந்திருப்பது பாகுபலி படக்குழுவினரை பரபரபாக்கியுள்ளது.