'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் 'மாயா'. முழுக்க முழுக்க நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால் இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக... கதாநாயகியாக 'அதே கண்கள்' படத்தின் நாயகி ஷிவதா நடிக்கிறார். இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடித்த வாமிகாவும் இணைந்துள்ளாராம். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
'மாயா' படத்திற்கு இசையமைத்த ரான் யோஹன்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு என்ன என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு என்ன என்பதை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. மாயா படத்தின் வெற்றி சென்ட்டிமெண்ட் காரணமாக மா என்ற எழுத்தில் தொடங்கும் டைட்டிலையே வைக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.