'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு முதன் முறையாக இணைந்து தமிழ், தெலுங்கில் உருவாக்கி வரும் படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகும் என்று மகேஷ் பாபு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் தலைப்பு எது என்பதில் ஏற்பட்ட குழப்பமே தாமதத்திற்கான காரணம் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்கும் பொதுவான ஒரு பெயரை படத்திற்கு வைக்க முருகதாஸ் முயன்று வருகிறார். ஆனால், அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்கிறார்கள்.
படத்தின் முதல் பார்வை பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின் பிப்ரவரி மாதத்திலாவது வெளிவந்து விடும் என்றார்கள். நேற்று யுகாதி தினத்தன்று வெளிவந்துவிடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
மகேஷ்பாபுவைத் தொடர்பு கொள்ளும் ரசிகர்கள் எப்போதுதான் படத்தின் பெயரையும், முதல் பார்வையையும் வெளியிடுவீர்கள் என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு.
அதில், “என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு, மகேஷ் 23 படத்தின் முதல் பார்வைக்காக நீங்கள் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பது தெரியும். எங்களது குழுவினர் இரவு, பகலாக ஷட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முதல் பார்வை விரைவில் வெளியாகும். கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் முதல் பார்வை வெளியாகுமா அல்லது தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்கு வெளியாகுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.