மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஷங்கர் - ரஜினியின் பிரமாண்ட கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற மாபெரும் படம் ‛எந்திரன்'. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது, ‛2.O' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாகவும், இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் என்ற பெருமையோடு இப்படம் உருவாகி உள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
‛2.O' படத்தில் ரஜினி விஞ்ஞானி மற்றும் ரோபாகவும், அக்ஷ்ய் வில்லன் ரோலிலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இப்போது படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி, விஞ்ஞானி மற்றும் ரோபாவாக மட்டுமல்ல 5 வித்தியாசமான தோற்றத்தில் வர உள்ளாராம். அதில் இரண்டு ரோலில் குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஜினியை போன்றே அக்ஷ்ய்யும் வித்தியாசமான பல வேடங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது படம் முழுக்க இவர்கள் தான் இருப்பார்கள் என தோன்றுகிறது. அதுமட்டுமல்ல விஎப்எக்ஸ்.க்கும் பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
இந்திய சினிமாவில் தற்போது இரண்டு படங்களுக்கு தான் கடும் போட்டி நிலவுகிறது. ஒன்று அடுத்தமாதம் வெளியாக உள்ள ‛பாகுபலி-2 மற்றும் ‛2.O'. இதில் பாகுபலி-2 படம் ரிலீஸாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்து கொண்டு இருக்கிறது. இந்த சாதனைகளை எல்லாம் ‛2.O' முறியடிக்குமா...? என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!