மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ஆண்டுதோறும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சேம்பர் தேர்தலில் ஓட்டளிப்பவர்களுக்கு சங்க விதி ஒரு சலுகை அளித்திருக்கிறது. அதாவது ஒரு உறுப்பினர் ஓட்டளிக்க நேரடியாக வர முடியாவிட்டால் அவர் ஒருவரை தனக்கு பதிலாக அனுப்பி வைத்து அவர் மூலம் ஓட்டளிக்க முடியும். இதற்கு வருகிறவரிடம் அவர் ஒரு ஒப்புதல் கடிதம் கொடுத்து அனுப்ப வேண்டும். இந்த ஒரு விதிமுறையை பயன்படுத்தி சேம்பரில் ஒரு சிலர் அதை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி தங்களுக்கே ஓட்டளித்துக் கொள்வார்கள். வெற்றியும் பெற்று விடுவார்கள்.
இந்த விதியை நீக்க கோரியும் மற்ற சங்கங்கள் போல உறுப்பினர்கள் நேரடியாக வந்து ஓட்டளிக்க வேண்டும் என்றும் கேட்டு தயாரிப்பாளரும் சேம்பரின் முன்னாள் துணை தலைவருமான கே.ராஜன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில் "உறுப்பினர்கள் தங்களுக்கு பதிலாக முகவர்கள் மூலம் வாக்களிக்கிற முறை கிரிக்கெட் வாரியத்தில் இருந்தது. அதனை லோதா குழு நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதனை உச்சநீதி மன்றமும் ஏற்றுக் கொண்டது. அந்த அடிப்படையில் வர்த்தக சபை தேர்தலிலும் இந்த விதியை நீக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சேம்பர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதி பரந்தாமன் இதனை பரிசீலனை செய்து தகுந்த முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்