மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
2.o படப்பிடிப்பின் போது, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க இயக்குநர் சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: இந்த சம்பவம் எனது கவனத்திற்கு வராமல் நடந்துள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த போது, அங்கு நான் இல்லை. படப்பிடிப்பு நடந்த வீட்டிற்குள் சென்று விட்டேன். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின்போது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என நான் பல முறை அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இதனை தொடர்ந்து, தாக்குதல் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.