மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சரண்யாவைத் தொடர்ந்து ராதிகா, ஊர்வசி, நதியா, ரம்யாகிருஷ்ணன் என பல நடிகைகள் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த பட்டியலில் இப்போது பவுனு பவுனுதான் ரோகினியும் சேர்ந்துள்ளார். இதற்கு முன்பு சில படங்களில் அம்மாவாக நடிக்க வாய்ப்புகள் சென்றபோது, எனக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லை என்று அந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பிவந்த அவர், சசிகுமார் நடித்த பலே வெள்ளையத் தேவா படத்திலும் அப்படியொரு வாய்ப்பு சென்றபோது, இனியும் தாமதிக்க வேண்டாம் என்று அந்த படத்தில் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்தார்.
அதையடுத்து, தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் ரோகினி. இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் சரண்யாவைதான் முடிவு செய்து வைத்திருந்தாராம் மோகன்ராஜா. ஆனால், ரெமோ படத்தில் தனக்கு அம்மாவாக சரண்யா நடித்திருந்ததால், அடுத்த படத்திலும் அவரே அம்மாவாக நடித்தால் ஒரேமாதிரியாக இருக்கும் என்று வேறு நடிகையை நடிக்க வைக்கலாம் என்று தனது கருத்தை சொன்னாராம் சிவகார்த்திகேயன்.
அதையடுத்து வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்தபோதுதான் ரோகினியை முடிவு செய்தார்களாம். மேலும், இப்படி அம்மா கேரக்டர் மட்டுமின்றி காமெடியன், கதாநாயகி என மற்ற வேடங்களில் நடிப்பவர்களும் தொடர்ந்து தன்னுடன் இணைந்து நடிப்பதை விரும்பாத சிவகார்த்திகேயன், படத்துக்கு படம் வெவ்வேறு நடிகர்-நடிகைகள் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.