மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் டோரா. புதுமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ளார். விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேமிஜந்த் ஜெபக் நிறுவனத்துடன் இணைந்து சற்குணம் சினிமா தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கார் பேயாக நடித்திருக்கிறது. காருக்குள் இருக்கும் பேய்க்கும் அதை ஓட்டும் நயன்தாராவுக்கும் இடையில் நடக்கும் திக் திக் சம்பவங்கள்தான் கதை. "இந்த படத்தின் கதை நான் எழுதிய அலிபாபாவும் அற்புத காரும் என்ற கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்" என்று ஆர்.எம்.ஸ்ரீதர் என்பவர் புகார் கூறினார். ஆனால் டோரா காப்பி அடிக்கப்பட்ட கதை அல்ல என்று எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
சம்பந்தப்பட்ட இரு கதைகளும் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயக்குனர் டி.கே.சண்முகசுந்தரம், எழுத்தாளர் சி.ரங்கநாதன், வி.ஹேமமாலின் ஆகியோரை கொண்ட கதை ஆய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இரண்டு கதைகளையும் ஆய்வு செய்தது. இரண்டு படத்தின் கதையும், கதை நிகழ்வும், பாத்திரங்களும் வெவ்வேறானவை என்று அந்த குழு முடிவு செய்து அறிக்கை சமர்ப்பித்தள்ளது. அதை ஏற்று அதையே எழுத்தாளர் சங்கத்தின் முடிவாக அறிவிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.