விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ்த் திரையுலகத்திலும், சமூக வலைத்தளங்களிலும் கடந்த ஒரு வார காலமாகவே அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட விஷயங்கள் என்று சொன்னாலும் கூட அவை சமூக வலைத்தளங்களில் வெளிவந்த பிறகு அது பற்றிய விமர்சனங்களும், கருத்துக்களும் வரத்தான் செய்யும். இன்றைய மொபைல் உலகத்தில் எதுவுமே தனிப்பட்ட விஷயமாக 'பிரைவசி' என்ற ஒன்றைப் பாதுகாக்க முடியாததாகவே இருக்கிறது. அதனால், பிரபலங்களே தனி கவனத்துடன் தங்களை 'பிரைவசி'யைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களில் பலராலும் விமர்சிக்கப்ட்ட ஒரு விஷயம் 'போதை'. அதற்குத் தாங்கள் அடிமை என்பதை எந்தப் பிரபலமும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால், தெலுங்குத் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராகவும், தமிழிலும் நடித்த பானுசந்தர் ஒரு காலத்தில் தான் போதைக்கு அடிமையாக இருந்தேன் என்பதை டிவி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
“சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு பாலிவுட்டில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றிய போது போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். எனது மோசமான நிலையைப் பார்த்த எனது அம்மா, தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னதால், போதைப் பழக்கத்தை கைவிட்டேன். சென்னைக்கு வந்து தற்காப்புக் கலையில் கவனம் செலுத்தி பின்னர் நடிகரானேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
80களில் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்த பானுசந்தர் தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் “மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு” ஆகிய படங்களில் நடித்தவர். 2015ல் வெளிவந்த 'காஞ்சனா 2' படத்திலும் நடித்துள்ளார்.
டோலிவுட் வட்டாரங்களில் பானுசந்தரின் வெளிப்படையான பேட்டிதான் இப்போது ஹாட் - டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.