விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தன்னை பலாத்காரம் செய்துவிடுவதாகவும், ஆசிட் வீசி விடுவதாகவும் டுவிட்டரில் சிலர் மிரட்டுகின்றனர் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார். பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான திரைப்பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் திரையுலகினர் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்று பல பிரபலங்களின் லீலைகளும் வெளியாகும் என அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை தான் வெளியிடவில்லை, தனது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று சுசித்ரா கூறினார். ஆனாலும் சுசிலீக்ஸ் என்ற பெயரில் பல டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு பல பிரபலங்களின் கசமுசா படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எப்போதும் டுவிட்டரில் ஆக்ட்டிவாக இருக்கும் பாடகி சின்மயியும் கூட இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் சின்மயி சம்பந்தப்பட்ட விஷயங்களும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கும் சின்மயி கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே டுவிட்டர் பக்கத்தில் சிலர் மிரட்டி வருவதாக கூறியுள்ளார் சின்மயி. ‛பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம், முகத்தில் ஆசிட் வீசி விடுவோம், பாட முடியாத அளவுக்கு செய்து விடுவோம் என்று சிலர் தொடர்ந்து டுவிட்டரில் மிரட்டி வருகிறார்கள். இதுபோன்று மிரட்டல் விடுபவர்களின் டுவிட்டர் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும்'' என்று சின்மயி கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக இணையதளம் ஒன்றில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டு, ஆதரவும் திரட்டி வருகிறார்.