பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை கடந்த ஒரு வருட காலமாக இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இந்தப் படத்தை ஜுன் 23ம் தேதி வெளியிடப் போவதாக முருகதாஸ் சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.
இருந்தாலும், படத்தின் தலைப்பையே அறிவிக்காமல் ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருப்பது இதுதான் முதல் முறை என கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்திற்கு 'சம்பவாமி' என தலைப்பை முடிவு செய்து வைத்திருந்தார்களாம். ஆனால், அந்தத் தலைப்பு படத்தின் நாயகனான மகேஷ் பாபுவுக்குப் பிடிக்கவில்லையாம்.
படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியிட இருப்பதால் மூன்று மொழிக்கும் பொதுவான தலைப்பை வையுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.