புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
2017 ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர், இசை வெளியீடு எப்போது நடக்கும் என்ற தகவலை படத்தின் இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். யு டியுபிலும் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். அந்த மோஷன் போஸ்டர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
படத்தின் பிரமோஷன் வேலைகளையும் நேற்று ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது யு டியூபில் ராஜமௌலி கொடுத்துள்ள சிறப்பு பேட்டியுடன் இந்த பிரமோஷன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அதில் படத்தின் டிரைலருக்கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், கிராஃபிக்ஸ் காட்சிகளைச் சேர்க்க வேண்டிய பணி இன்னும் முடிவடையாததால், டிரைலரை வெளியிடும் தேதியை அறிவிக்க முடியவில்லை. விரைவில் அது பற்றி தெரிவிப்போம் என ராஜமௌலி கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் தென்னிந்தியத் திரையுலகத்தில் '2.0' தமிழ்ப் படத்திற்கு முன்னதாகவே வெளிவரும் 'பாகுபலி 2' படம் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.