மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நாகார்ஜூனா மற்றும் அவரது முதல் மனைவி லக்ஷ்மி தம்பதியரின் மகனான நாகசைதன்யா விரைவில் நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். லக்ஷ்மி டகுபதியின் சகோதரர் மகன் தான் ராணா டகுபதி. நாகசைதன்யா தற்போது தனது தந்தை நாகார்ஜூனா மற்றும் அவரது இரண்டாவது மனைவி அமலாவுடன் வசித்து வந்தாலும் தனது தாய் லக்ஷ்மி மற்றும் லக்ஷ்மி குடும்ப உறவுகளிடம் நல்ல நட்பு பாராட்டி வருகின்றார். உறவினர்களான ராணாவும் நாகசைதன்யாவும் நெருங்கிய நண்பர்களும் கூட. அந்த வகையில் நாகசைதன்யா சமந்தா திருமணம் குறித்து ராணா கூறியுள்ளார். தமிழ் தெலுங்கில் திரைக்கு வந்து காஸி படத்தின் புரமோஷனில் நாயகன் ராணா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராணாவிடம் நாகசைதன்யா-சமந்தாவின் காதல் மற்றும் திருமணம் குறித்து கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராணா, சமந்தா எங்கள் குடும்பத்தில் இணைவது மகிழ்ச்சியே, இவர்களது திருமணத்திற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் என ராணா கூறியுள்ளார்