மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தன்னுடைய நண்பர் பெயரில் '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள ஹீரோ ஃபஹத் ஃபாசில் இன்னொரு ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். அதாவது சினேகாவுக்கு சிவகார்த்திகேயனுக்கு அக்கா வேடம் என்ற தகவல் அடிபடுகிறது. ரோகிணி, தம்பி ராமையா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், 'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு பொன்ராம், ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள சிவகார்த்திகேயன் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கராவிடம் அண்மையில் கதை கேட்டிருக்கிறார். சுதா சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துவிட்டதாம். உடனடியாய் சுதாவை அனுப்பி ஏ.எம். ரத்னத்திடம் கதை சொல்ல வைத்திருக்கிறார். சுதா - சிவகார்த்திகேயன் இணையும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பல கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.