மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த்திரையுலகில் பல வருடங்களாக ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்துவரும் பட நிறுவனம் - சிவாஜி புரொடக்ஷன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய இந்த பட நிறுவனம் தற்போது அவரது மகன்கள் ராம்குமார், பிரபு நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.
ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தை தயாரித்தவகையில் லாபம் ஈட்டிய சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் சில வருடங்கள் கழித்து அஜித் நடித்த 'அசல்' படத்தை தயாரித்தது. அசல் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அசல் படத்தின் தோல்விக்கு பிறகு சிவாஜி பிலிம்ஸ் வேறெந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
இந்நிலையில் தங்களின் அடுத்தடுத்த புராஜெக்ட்டிற்காக விஜய் சேதுபதியையும், ராகவா லாரன்ஸையும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படமொன்றை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அதோடு, 'சந்திரமுகி'யின் 2ஆம் பாகத்தை தயாரிப்பது பற்றியும் இயக்குநர் பி.வாசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.
'சந்திரமுகி'யின் 2ஆம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டதால், அந்தப் படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறாராம். வாசுவின் இயக்கத்தில் 'சந்திரமுகி'யின் 2ஆம் பாகமான ஆப்த ரக்ஷகா என்ற படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.