மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜெய் ஆகாஷ் நடித்துள்ள அமாவாசை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி உள்ள இந்தப் படத்தை ராகேஷ் சவந்த் இயக்கி தயாரித்துள்ளார், சையது அகமது இசை அமைத்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொண்டு மன்சூரலிகான் பேசியதாவது:
இங்க இந்த "அமாவாசை" பட பேனர்களில் அம்மாவின் நல்லாசியுடன் என ஜெவோட போட்டோ வ போட்டு இருக்காங்க... அவங்க நல்ல ஆட்சிதான் பண்ணினாங்க ஆனா அவங்க கூட இருந்தவங்க அவங்களை கொண்ணுட்டதா சொல்றாங்க .. அவங்க 4 நாயை வளர்த்திருந்தாக்கூட கொன்றவரை கடித்து கால் அடியில் போட்டிருக்கும். ஆனா, விசுவாசம் இல்லாதவங்களால இப்போ, எடப்பாடியா? காட்பாடியா ..? ஒரே குழப்படியா இருக்கு ... கூவத்தூர் பிரச்சினை இதோட முடிஞ்சுடுமுன்னு நம்பலாம்.
எடப்பாடியோ, காட்பாடியோ, கொளப்பாடியோ குழப்படியில்லாமல் யாரோ வாங்க.. தமிழ்நாடு டெட்பாடி ஆகுறதுக்குள்ள... ஏன்னா, 2 மாசமா நீடிக்கும் பிரச்சினைகளில், தமிழ்நாட்டை அன்ரெஸ்ட்லேயே வச்சிருக்காங்க.. அதனால சொல்லவரேன் .. பாத்ரூம்லக் கூட இப்போல்லாம் சிசிடிவி வச்சிருக்காங்க, ஆனா போயஸ் கார்டன்லயும், அப்பல்லோ ஹாஸ்பிடல்லயும் கேமிராவே இல்லையாம். இத எப்படி நம்புறது? என்னமோ இனியாவது நல்லது நடந்து திரையுலகமும், தமிழகமும் வாழ வேண்டும். இவ்வாறு மன்சூரலிகான் பேசினார்.