மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
22 வயதே ஆன ஊட்டி இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள துருவங்கள் பதினாறு படம் இன்று 50 வது நாளை தொட்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் உண்மையான வெற்றி இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது. படத்தில் நடித்தவர்களில் ரகுமான் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். அதே போல இசை அமைப்பாளர் ஜாக்ஸ் பிஜே, ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் அனைவரும் புதுமுகங்களே.
ஆரம்பத்தில் இந்தப் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. சில ஆண்டுகள் தயாரிப்பாளர் தேடி அலைந்துவிட்டு கிடைக்காததால் நண்பர்களின் உதவியுடன் தானே தயாரிப்பாளர் ஆனார் கார்த்திக் நரேன். அவரிடம் கதை கேட்க கூட எந்த ஹீரோவும் தயாராக இல்லை. அதற்கு அவர் வயது ஒரு காரணம். மற்றொன்று அவர் எந்த இயக்குனரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். படம் இல்லாமல் இருந்த பார்த்திபன் கூட இந்தப் படத்தை நிராகரித்திருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இப்போது படம் வெற்றி பெற்றிருக்கிறது.
துருவங்கள் பதினாறு வெற்றி சில உண்மைகளை சொல்லுகிறது. சிறிய படங்கள் ஓடுவதில்லை. தியேட்டர் கிடைப்பதில்லை. மக்கள் பார்க்க வருவதில்லை என்கிற பொதுவான குற்றச்சாட்டுகளை படம் உடைத்திருக்கிறது. துருவங்கள் பதினாறு தியேட்டரில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்கிற மாதிரியான பிரமாண்டங்களை கொண்டதில்லை. ஆனாலும் மக்கள் தியேட்டருக்கு வந்தார்கள். ரகுமான் நடித்திருக்கிறார் என்பதற்காக யாரும் படம் பார்க்க வருவதில்லை. ஆனால் இதில் ரகுமான் மட்டுமே நடித்திருக்கிறார் என்று தெரிந்தும் வந்தார்கள். காரணம் படத்தின் கதையும். கதை சொன்ன விதமும்.
படம் நன்றாக இருந்தால் எந்த தடையும் ஒரு படத்திற்கு இல்லை என்பதுதான் துருவங்கள் பதினாறு சொல்லும் உண்மை. அதோடு இன்னொரு உண்மையும் உண்டு. இதே படத்தை கார்த்திக் நரேன் எந்த ஆரவாரமும் இல்லாமல் சாதாணரமாக வெளியிட்டிருந்தால் பத்தோடு பதினொன்றாகியிருக்கும். மக்கள் கவனத்திற்கு படம் வராமலேயே போயிருக்கும். படத்தின் மவுத் டாக் வருவதற்குள் படத்தை தியேட்டரில் இருந்து எடுத்திருப்பார்கள்.
ஆனால் படத்தை ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடெயின்மெண்ட் என்ற நிறுவனங்கள் வாங்கியது. படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு சென்றார்கள். பிரபல இயக்குனர்களை படம் பார்க்க வைத்து அவர்களின் கருத்துக்களை விளம்பரமாக பயன்படுத்தினார்கள். அதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது. நல்ல கதை, அதை சொல்லும் நல்ல திரைக்கதை, எடுத்த படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரயுக்தி இந்த மூன்றும்தான் இன்றைய சினிமாவுக்கு முக்கியம் என சொல்லியிருக்கிறது துருவங்கள் பதினாறு.