மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமூக வலைத்தலங்களில் ஈடுபாட்டோடு இயங்குகிறவர்களுக்கு மிருனாலியை நன்றாகத் தெரியும். டப்மாஸில் நரேந்திர மோடியில் இருந்து த்ரிஷா வரைக்கும் கலாய்த்து எடுப்பவர். டப்மாஸ் குயின் என்றே அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். பல லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மிருனாலினி பெங்களூரில் ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். இவரது டப்மாஸ் புகழ் அவரை ஹீரோயின் ஆக்கிவிட்டது. சுரேஷ்குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் நகல் என்ற படத்தில் மிருனாலினி ஹீரோயினாக நடிக்கிறார். அவர் மட்டும்தான் நடிக்கிறார்.
ஆம்.... இந்தப் படம் ஒருவர் மட்டுமே நடிக்கும் வித்தியாசமான படம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு காரில் தனியாக செல்லும் ஒரு பெண்ணுக்கு நடுவழியில் ஒரு சிக்கல் உண்டாகிறது. அதிலிருந்து அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. படத்தில் மிருனாலினி தவிர வேறு யாரும் நடிக்கவில்லை.
"நகல் படத்தில் நடிப்பதற்காக பலரை அணுகியபோது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை, நடிப்பது சிரமம் என்றார்கள். அப்போதுதான் மிருனாலினி எங்கள் கவனத்துக்கு வந்தார். டப்மாஸில் கலக்குகிறார். எந்த இயக்குனரும் இல்லாமல், வழிகாட்டுதலும் இல்லாமல் செல்பி வீடியோவிலேயே நடிப்பில் கலக்குகிறார் அவர். அவரை அணுகியபோது முதலில் சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை என்றார். ஒருவர் மட்டுமே நடிக்கும் கதை என்பதால் அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு நடிக்க முன்வந்திருக்கிறார்" என்கிறார் இயக்குனர் சுரேஷ் குமார். படப்பிடிப்புகள் வருகிற 20ந் தேதி முதல் தொடங்குகிறது.