மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தனியார் பள்ளி கல்லூரி முறைகேடுகள் குறித்து சமீபத்தில் நிறைய படங்கள் வந்திருக்கிறது. சூர்யா நடித்த பசங்க 2, சமுத்திரகனியின் அப்பா, விஜய் வசந்த் நடித்த அச்சமின்றி, விஜய் நடித்த பைரவா போன்றவை கல்வி முறைகேடு பற்றி சொன்னது. அந்த வரிசையில் வருகிற மற்றுமொரு திரைப்படம் சாயா. அம்மா அப்பா பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.சசிகலா பழனிவேல் தயாரித்துள்ளார், ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார் புதுமுகம் சந்தோஷ் கண்ணா ஜோடியாக டூரிங் டாக்கீஸ் காயத்ரி நடித்துள்ளார். சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இருமுறை வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படம் பிப்ரவரி 3ந் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து இயக்குனர் வி.எஸ் பழனிவேல் கூறியதாவது: கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு. பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது 'சாயா.'
தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாக பேசுவதோடு, இன்றைய கல்வி நிலையங்களின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டும் படமாகவும் சாயா படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆசிரியர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாடம் சொல்லிக்கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது சாயா.
பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை. மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது ஜல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது வெளியிட முடியவில்லை. இப்போது துணிச்சலுடன் வெளியிடுகிறோம். என்றார் பழனிவேல்.