விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஜயகாந்த் நடித்த பெரிய மருது, தென்னவன், அஜித்தின் சிட்டிசன் படங்களில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தவர் மதுரை மோகன். அதையடுத்து முண்டாசுப்பட்டி, ரஜினிமுருகன், சகலகலா வல்லவன், அச்சம் என்பது மடமையடா, கொடி ஆகிய படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது மூன்று காமெடி படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார்.
அந்த படங்கள் பற்றி மதுரை மோகன் கூறும்போது, சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அதிரடியான கேரக்டர்களில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது வயது 68 ஆகி விட்டதால் என்னை தாத்தா கேரக்டர்களுக்கே அழைக்கிறார்கள். அந்தவகையில், முண்டாசுப்பட்டியில் நான் நடித்த தாத்தா வேடம் பெரிய அளவில் ரீச்சானது. அதனால் இப்போது என் பெயரையே மறந்து முண்டாசுப்பட்டி தாத்தா என்றுதான் அனைவருமே சொல்கிறார்கள். அதோடு, இப்போது என்னை பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடிக்கவே அழைக்கிறார்கள்.
அந்த வகையில், அச்சம் என்பது மடமையடா, கொடி படங்களைத் தொடர்ந்து
காலக்கூத்து, மரகதநாணயம், அண்டாவக்காணோம் ஆகிய படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளேன். இதில்,அண்டாவக்காணோம் படத்தில் டைட்டீல் முதல் என்ட் கார்டு போடும் வரை காமெடிதான். ஒரேயொரு சீன்தான் செண்டிமென்டாக இருக்கும். படத்தில் நடித் துள்ள எல்லா கேரக்டர்களுமே காமெடிதான். நானும், இன்னொருவரும்தான் லீடு ரோல்லி நடித்துள்ளோம். கிராமத்து பெருசுகள் பண்ற ஜொள்ளு லொள்ளு தான் இந்த அண்டாவக்காணோம் படம்.
அடுத்து, மரகத நாணயம் படத்தில் அந்த நாணயம் குறித்த ரகசியம் தெரிந்த ஒரேயொரு ஆள் நான்தான். அதை தேடி அலைந்து என்னிடம் வருவார்கள். ஆனால் அந்த ரகசியத்தை சொல்வதற்குள் நான் இறந்து விடுவேன். சிக்னல் மட்டும் கொடுத்து விட்டு போய் விடுவேன். அதை வைத்துக்கொண்டு அவர்கள் தேடுவது மிக காமெடியாக இருக்கும். காலக்கூத்து படத்தில் ஒரு தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறேன். அதிலும் காமெடி காட்சிகள் உள்ளது. ஆக, இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி விட்டன. இந்த படங்கள் வெளியாகும்போது அடுத்தடுத்து காமெடி வேடங்களில் நடிக்க என்னை கோலிவுட் டைரக்டர்கள் கட்டாயம் தேடுவார்கள் என்கிறார் மதுரை மோகன்.